கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டாஸ்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் கன்னிமுத்து என்பவரது மகன் 26 வயதான சூரிய பிரகாஷ். இவர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் 23 வயதான அருண் கார்த்திக், என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, இவர் மீது பொள்ளாச்சி மேற்கு காவல் ஆய்வாளர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்,ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும் தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சூரிய பிரகாஷ் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார்.அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் குண்டர் சட்டத்தில் சூர்ய பிரகாஷை கைது செய்ததற்கான ஆணை சிறைத்துறை அதிகாரிகளிடம் இன்று வழங்கபட்டதாக தெரிவித்துள்ளார்.
Tags :