கடையநல்லூரில் கள்ளக்காதல் விவகாரம் வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் கைது

by Staff / 18-09-2023 03:25:54pm
கடையநல்லூரில்  கள்ளக்காதல் விவகாரம் வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் கைது

கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் கிராமம் தேவர்  தெருவை  சேர்ந்த தங்கராஜ் வயது 27  திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தங்கராஜ் வெளிநாட்டு வேலை பார்த்து வருகிறார் தற்போது வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பி உள்ளார்  மனைவியுடன் குடும்பம் நடத்தாமல் கடையநல்லூரில் தனியாக வீடு பிடித்து குடியிருந்து வருகிறார் அதே நேரம் போக நல்லூர் பகுதியில் வேறு  ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் போகநல்லூரைச் சேர்ந்த சுப்பையாபாண்டி அவருடைய மகன் மற்றும் மூன்று நபர்கள்    சேர்ந்து
 இன்று காலை 6 மணி அளவில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை அருகே டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த பொழுது   அங்கு வந்த  கள்ளக்காதலியின் கணவர் மற்றும் கள்ளக்காதலியின்   மாமனார் மற்றும்  உறவினர்கள் தங்கராஜை வழிமறித்து சரமாரியாக தாக்கினார் அப்போது  டீக்கடையிருந்த   50 லிட்டர் பால் கொட்டப்பட்டது காலை சிற்றுண்டிகள் தூக்கி வீசப்பட்டது டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்  பிடித்தனர் இதில்  தங்கராஜ்படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அதன் பின்னர் தாக்கியவர்கள் அங்கு இருந்து தப்பிச் சென்றனர் இதில் ஒருவரை மட்டும் அருகில் இருந்தவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதன் பின்னர்  அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த தங்கராஜை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த சம்பவம் பற்றி தங்கராஜ் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா,  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் தப்பிச்சென்ற நால்வரையும் போலீசார்  வலைவீசி தேடி வருகிறது.

 

Tags :

Share via