பெண் உதவி ஆட்சியர் மர்ம மரணம்
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த சஸ்மிதா மின்ஜ் (35) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த 15ஆம் தேதி வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இம்மாதம் 17ஆம் தேதி அவர் விடுதியில் இருப்பதை அறிந்து அவரது தாயும், சகோதரரும் அவரை சந்திக்க முயன்றனர், ஆனால் அவர் ஓய்வெடுக்க விரும்பி சந்திக்க மறுத்துள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, நகரத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :