தென்காசியை சேர்ந்தவருக்கு திருச்சியில் நடந்த கொடூரம்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நபர், தனது நண்பரின் தம்பி திருச்சி இருங்களுரில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்க்க சென்றுள்ளார்.பின்னர் அவர் தனது அறைக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு டூவீலரில் வந்த நபர், தனது பெயர் வசந்த் என்றும், உதவி செய்கிறேன் எனக்கூறி, ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்ற போது தனது வீட்டிற்கு சென்றவுடன் திரும்பி வந்துவிடாலம் என கூறி இருங்களுர் குடிசை மாற்று வாரியம் 5ஆம் நம்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது, கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த கவியரசன், யுவராஜ், ரவி, அய்யனார் ஆகியோர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு அந்த நபரை வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அவர் மறுத்துள்ளார். தொடர்ந்து பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும், அவரை வலுக்கட்டாயமாக தாக்கியும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் அந்த நபரிடம் இருந்த செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து அவரை விரட்டினர். இது குறித்து சமயபுரம் போலீசில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : ஓரினச்சேர்க்கையில்