தாமிரபரணியில் 3000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

by Editor / 17-12-2023 11:07:02am
தாமிரபரணியில் 3000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பாபநாசம் சேர்வலாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து 10000 கனஅடி அளவிற்கு இருக்கின்ற காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக தாமிரபரணியில் 3000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.  இன்று காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம்  80%, சேர்வலாறு 72%, மணிமுத்தாறு 45% நீர் இருப்பு உள்ளது. பிற பகுதிகளிலும் மழை இருக்கின்ற காரணத்தினால் ஆங்காங்கே வந்து சேரும் நீரின் அளவையும் சேர்த்து தாமிரபரணியில்  5000 கன அடி  அளவிற்கு நீர் செல்லும்.பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மழையால் நீர் வர வர நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும். - மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி

 

Tags : தாமிரபரணியில் 3000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Share via