பேரூந்துக்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்க தடை.

by Editor / 28-09-2023 11:06:21am
பேரூந்துக்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்க தடை.

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. இந்த நிலையில், இந்த மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளைப் பெறக் கூடாது என பேருந்து நடத்துனர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அக்டோபர் மாதம் முதல் செல்லாது என்பதால் அக்டோபர் முதல் அவை மாற்றப்படும் என ரிசர்வ் வங்கி முன்னதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பேரூந்துக்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்க தடை.

Share via