குன்னூர் விபத்தில் உயிர் இழந்தவர்கள் உடல்கல் சொந்த ஊரில் அடக்கம்.
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சார்ந்த சுமார் 55 -க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் விடுமுறை தினம் என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.கடந்த 28 ஆம் தேதி இரவு கடையத்திலிருந்து ஓன்று கூடி 11.30 மணியளவில் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் ஏற்பாட்டில் புறப்பட்ட இவர்கள் ஊட்டியின் பல்வேறு பகுதியில் சுற்றிப் பார்த்துவிட்டு பேருந்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் பேருந்தில் 55 க்கும் மேட்ட சுற்றுலா பயணிகள் இருந்துள்ளனர். இவர்கள் பயணித்த பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது பேரூந்து நிலை தடுமாறி சுமார் 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கடந்த 30ஆம் தேதி 6.30 மணியளவில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த வர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மேட்டுப்பாளையம் மற்றும் கோவை,குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் சொந்த ஊரான கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 9 பேரின் உடல்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.இதன் தொடர்ச்சியாக இறுதிச்சடங்கு அவரவர் ஊர்களில் தகனம் (அ) அடக்கம்,நடைப்பெற்றது.விபத்தில் லேசான காயமடைந்தவர்கள், பேருந்து மூலம் ஊருக்கு அழைத்து வரப்பட்டனர்.
Tags : குன்னூர் விபத்தில் உயிர் இழந்தவர்கள் உடல்கல் சொந்த ஊரில் அடக்கம்.