கஞ்சா விற்ற சகோதரர்கள் கைது.ஒரு கிலோ கஞ்சா, ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்
சென்னை தாம்பரம் பகுதியில் ஐ.டி. ஊழியர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்த சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலின்படி தாம்பரம் கல்யாண் நகரில் உள்ள அவர்களது வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நிலையில் கஞ்சா சிக்கியுள்ளது. பிடிபட்டவர்கள் அளித்த தகவலின் படி, அவர்களுக்கு கஞ்சா விற்ற மொத்த வியாபாரிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags : ஒரு கிலோ கஞ்சா, ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்