ஆளுநரோடு அருகருகே அமர்ந்து  இசை நிகழ்வை  ரசித்த முதல்வர்

by Editor / 02-10-2023 02:45:48pm
ஆளுநரோடு அருகருகே அமர்ந்து  இசை நிகழ்வை  ரசித்த முதல்வர்

மகாத்மா காந்தியின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் அரசு அருங்கட்சியகவளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி கலந்துகொண்டு மகாத்மாகாந்தி படத்திற்கு மரியாதை செய்தனர்.அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகாத்மா காந்தி தொடர்பான இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும், அருகருகே அமர்ந்து இசை நிகழ்ச்சியை ரசித்துகண்டுகளித்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் அருகருகே அமர்ந்து சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ஆளுநரோடு அருகருகே அமர்ந்து  இசை நிகழ்வை  ரசித்த முதல்வர்

Share via