நில மோசடி வழக்கில் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன்

by Staff / 04-10-2023 01:32:59pm
நில மோசடி வழக்கில் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன்

நில மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு யாதவுக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி, நில மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் 14 குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் லாலு யாதவுடன், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஆர்ஜேடி எம்பி மிசா பார்தி ஆகியோருக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

 

Tags :

Share via