ஓரினச்சேர்க்கை காரணமாக நடந்த கொலை
கடலூர், ஸ்ரீமுஷ்ணம் அருகே கடந்த 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவன் ஜீவா பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தபோது, ஆனந்த் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், சென்னை, தாம்பரத்தில் குற்றவாளி ஆனந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்தபோது அவரை சுற்றுவளைத்த போலீசார் கைது செய்துள்ளனர். ஓரினச்சேர்க்கை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :