தேயிலை கொள்முதல் விலை ரூ.14.60 ஆக உயர்த்தி அறிவிப்பு.

by Editor / 07-10-2023 07:25:02am
தேயிலை கொள்முதல் விலை ரூ.14.60 ஆக உயர்த்தி அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலை கிலோவுக்கு 14 ரூபாய் 60 காசுகள் நிர்ணயம் செய்து இந்திய தேயிலை வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஒரு கிலோ தேயிலை ரூ.10 முதல் ரூ.12 வரை கொள்முதல் விலை இருந்த நிலையில், விலை வீழ்ச்சி அடைந்து வந்ததால் தேயிலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தேயிலைக்கான கொள்முதல் விலையை ரூ.14.60 ஆக உயர்த்தி தேயிலை வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

 

Tags : தேயிலை கொள்முதல் விலை ரூ.14.60 ஆக உயர்த்தி அறிவிப்பு.

Share via