அதிமுகவின் படுதோல்வி குறித்து ஒருவர் கூட கவலைப்பட கொள்ளவில்லை-அன்வர் ராஜா

by Editor / 27-07-2021 10:59:16am
அதிமுகவின் படுதோல்வி குறித்து ஒருவர் கூட கவலைப்பட கொள்ளவில்லை-அன்வர் ராஜா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, ஜெயலலிதா சிறை சென்ற போது, 200 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தால் 300க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்கள் என்று கூறிய அன்வர் ராஜா, தற்போது அதிமுக தோல்வி அடைந்ததில் ஒருவர் கூட தற்கொலை செய்யாதது ஏன்?தற்போது அதிமுகவின் படுதோல்வி குறித்து ஒருவர் கூட கவலைப்பட கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via