சுதந்திர போராட்ட தியாகிவேடசந்தூர்  கிருஷ்ணசாமிபட்டா வழங்க கோரிவிஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை ஆர்ப்பாட்டம்

by Admin / 21-07-2023 07:26:17pm
சுதந்திர போராட்ட தியாகிவேடசந்தூர்  கிருஷ்ணசாமிபட்டா வழங்க கோரிவிஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விஸ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பாக சுதந்திர போராட்ட தியாகி வேடசந்தூர்  கிருஷ்ணசாமி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும்  இடத்திற்கு பட்டா வழங்க கோரியும் வழங்க மறுக்கும் வேடசந்தூர் தாலுகா நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  மாநில அமைப்பு செயலாளர்   முருகன் தலைமையில்  நடைபெற்றது..மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது . இதில்  விஸ்வ ஜனசக்தி  பேரவை   பொதுச் செயலாளர் மகேஸ்வரன்.,மீனாட்சிசுந்தரம், பேரவை பொருளாளர்  ராஜசேகரன், பேரவை ஒருங்கிணைப்பாளர், அசோக் குமார் ,மண்டல செயலாளர், பார்த்தசாரதி, தென்மேற்கு மண்டல செயலாளர் சுரேஷ் ,பேரவை துணைச் செயலாளர் , மதுரை ,வழக்கறிஞர் திருமுருகன்,, திருச்சி மாவட்ட தொழிற்சங்க பேரவையின் தலைவர் தியாகராஜன், திருச்சி மாவட்ட செயலாளர் சந்திரன்,திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் சரவணன்,,  தென்காசி மாவட்ட செயலாளர் ஐயப்பன், தென்காசி மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் ஏராளமான விஸ்வகர்ம சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டனர்,.

 

Tags :

Share via