தனியார் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து
சென்னை புழலில் தனியார் ஏடிஎம் மையம், ஹோட்டலில் அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் மையத்தில் மின்கசிவு காரணமாக தீ பற்றி, ஹோட்டலுக்கும் பரவியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஏடிஎம் மையத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரம் தீயில் கருகி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2 மணிநேரம் போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Tags :