கோவையில் போதை தரும் மாத்திரைகள் உட்கொண்டு கல்லூரி மாணவர் உயிரிழப்பு ஒருவர் கைது

by Editor / 18-07-2022 01:24:42pm
கோவையில் போதை தரும் மாத்திரைகள் உட்கொண்டு கல்லூரி மாணவர் உயிரிழப்பு ஒருவர் கைது

கோவை மாவட்டம் மதுரை அருகே போதை தரும் வலி மாத்திரைகளை  உட்கொண்ட கல்லூரி மாணவர் உயிர் இழந்தார். அஜய்குமார் என்ற மாணவன் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார் அறையில் தங்கியிருந்த அஜய்குமர் கடந்த 13ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் இடது முன்கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக் கூடிய  மருந்துகளை ஊசி மூலம் ஏற்றபட்டதால்  உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக  கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது பாஷிர்  என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் போதை தரும் மாத்திரைகள் உட்கொண்டு கல்லூரி மாணவர் உயிரிழப்பு ஒருவர் கைது
 

Tags :

Share via