மனைவிக்காக கிணற்றில் குதித்த கணவர்
மனைவி கிணற்றில் குதித்ததையடுத்து கணவரும் அவரது நண்பரும் கிணற்றில் குதித்த சம்பவம் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் நடந்துள்ளது. நெலகொண்டப்பள்ளி மண்டலம் அப்பளநரசிம்மபுரத்தில் நாகராஜு, ரமணா என்ற தம்பதியினர் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் ரமணா கிணற்றில் குதித்து இறந்து விடுவது போல் கோபித்துக்கொண்டு சென்று விட்டார். இதையடுத்து, அவரது கணவர் நாகராஜூ கிணற்றில் குதிக்க, அவரது நண்பர் ஜோஜியும் கிணற்றில் குதித்து அவரை காப்பாற்றினார். இதற்கிடையில், ரமணா அருகில் உள்ள வயல்வெளியில் அமர்ந்து அழுது கொண்டிருந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :