பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட நபர்கள்

by Staff / 24-04-2023 02:04:23pm
பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட நபர்கள்

நாட்டில் சமீபகாலமாக பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சமீபத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த மர்மநபர்கள், முதல் தளத்தில் உள்ள அடுக்குமாடி கதவில் துப்பாக்கியால் சுட்டனர். அதன்பிறகு, தரை தளத்தில் உள்ள மற்றொரு குடியிருப்பின் ஜன்னல் மீது 3 முறை சுட்டனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via