ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - அன்பில் மகேஸ்

by Staff / 12-10-2023 11:57:05am
 ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - அன்பில் மகேஸ்

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் NEET, JEE ஆகிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதில் ₹4.27 கோடி செலவினத்தைத் தவிர்த்திருக்கலாம் எனவும் 385 பயிற்சி மையங்களுக்கு தலா ₹55,000 செலவில் வாங்கப்பட்ட டிஷ் ஆண்டனாக்கள் 2018, 19 ஆகிய ஆண்டுகளில் 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

 

Tags :

Share via