ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப் பதிவு

by Staff / 13-10-2023 01:07:45pm
ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப் பதிவு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ரமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வர முருகனுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில், வருமானத்திற்கு அதிகமாக 354.66 சதவிகித அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3 கோடியே 89 லட்சத்து 29 ஆயிரத்து 263 சேர்த்தது தெரியவந்தது. அதாவது, வருமானத்துக்கு அதிகமாக 354.66 சதவிகித அளவுக்கு சொத்துக் குவிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

Tags :

Share via