கார் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்

by Editor / 15-10-2023 12:00:52pm
கார் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்

திருவண்ணாமலை செங்கம் அருகே அந்தனூர் பைபாஸ் சாலையில் கார் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். பெங்களூர் நோக்கி சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த 2 சிறுவர்கள், 4 ஆண்கள், ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : கார் மீது லாரி மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்

Share via