செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

by Staff / 16-10-2023 04:49:27pm
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை 7 முறைக்கு மேல் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தால் ஆதாரங்களை கலைப்பார். வழக்கு பலவீனமாகும் என அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது. இதற்கு, நிச்சயமாக ஆதாரங்களை கலைக்க மாட்டார். ஆதாரங்களை கலைக்க செந்தில் பாலாஜி முயற்சிக்க கூட மாட்டார் என செந்தில் பாலாஜி தரப்பு வாதம் வைத்துள்ளது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

Tags :

Share via