சரக்கு லாரி - டேங்கர் லாரி மோதிவிபத்து. டிரைவர் உயிரிழப்பு.

by Staff / 18-10-2023 04:52:18pm
சரக்கு லாரி - டேங்கர் லாரி மோதிவிபத்து. டிரைவர் உயிரிழப்பு.

திருநெல்வேலி மாவட்டம், ஜமீன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர பாண்டியன் மகன் பேச்சிமுத்து வயது 34 டேங்கர் லாரி டிரைவர். அக்டோபர் 17ஆம் தேதி பெங்களூர் ஏரியூர் பகுதியில் இருந்து கேஸ் நிரப்பப்பட்ட டேங்க் லாரியை மதுரைக்கு கொண்டு செல்வதற்காக கரூர் - திண்டுக்கல் சாலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில், தேரப்பாடி பிரிவு அருகே வந்தபோது, அதே சாலையில் பருப்பு லோடு ஏற்றி வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது.லாரியை வேகமாக ஓட்டி வந்த பேச்சி முத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் நிறுத்தி இருந்த லாரியின் பின்னால் அவரது டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பேச்சி முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நாகராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த பேச்சி முத்துவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via