மூட நம்பிக்கைகளை தகர்த்த சமய புரட்சியாளர் - சீமான் இரங்கல்
கருவறைக்குள் பெண்கள் நுழையக்கூடாது, வழிபாடு நடத்தக்கூடாது என்ற மூட நம்பிக்கைகளை தகர்த்து பெருமளவில் பெண்கள் வழிபாட நடத்த வழிவகுத்த சமய புரட்சியாளர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் அருளாளர் ஐயா பங்காரு அடிகளார் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். 'ஐயா அவர்களின் இழப்பென்பது மெய்யியல் துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும். அருட்திரு பங்காரு அடிகளாரின் மறைவால் துயருற்றுள்ள பல லட்சக்கணக்கான அடியவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்' என கூறியுள்ளார்.
Tags :