காங்கிரஸின் ஏடிஎம் மையமாக மாற்றிய சத்தீஸ்கர் - அமித்ஷா

by Staff / 20-10-2023 03:29:52pm
காங்கிரஸின் ஏடிஎம் மையமாக மாற்றிய சத்தீஸ்கர் - அமித்ஷா

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலையொட்டி, ஜக்தல்பூர் மற்றும் கொண்டகானில் நடந்த தேர்தல் பேரணிகளில் வியாழன் அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஆளும் காங்கிரஸ் கட்சி நக்சலிசத்தை ஊக்குவிக்கிறது. பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் இடதுசாரி தீவிரவாத தாக்குதல்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை காங்கிரஸின் ஏடிஎம் மையமாக முதலமைச்சர் பூபேஷ் பாகல் மாற்றிவிட்டார். காங்கிரஸ் ஆட்சி ஊழல் அரசாக மாறியுள்ளது என்று அமித்ஷா குற்றம்சாட்டினார்.

 

Tags :

Share via