ஐ.பி.எஸ் அதிகாரிகள் 48 பேர் பணியிட மாற்றம்

by Staff / 07-01-2024 05:18:41pm
ஐ.பி.எஸ் அதிகாரிகள் 48 பேர் பணியிட மாற்றம்

48 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.ஜி. ஆர்..தமிழ்சந்திரனுக்கு கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு வழங்கி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  வி..ஜெயஸ்ரீ. ஐ.பி.எஸ் க்கு ஐ.ஜியாக பதவி உயர்வு அளித்து சென்னை காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்ன்.என்.எம்.மயில் வாகனன்,சென்னை தெற்கு போக்குவரத்து இணைஆணையர்,ஐ.ஐியாக பதவிஉயர்வு .மேலும் சென்னை மற்றும் கோவையில் தீவிரவாத தடுப்புப் பிரிவை உருவாக்கி சென்னையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.ஆக சினேகாபிரியா, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக சசிமோகன்,காஞ்சிபுர மாவட்டகண்காணிப்பாளராக இருந்த சுதாகர் சென்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையராக மாற்றம்,  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via