தேரில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயம்

by Staff / 12-04-2024 11:15:20am
தேரில் மின்சாரம் பாய்ந்து 13 குழந்தைகள் படுகாயம்

தெலுங்கு புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் கர்னூரில் உள்ள டெக்கூர் கிராமத்தில் நேற்று 
தேரோட்டம் நடைபெற்றது. அப்போது உயர் மின்னழுத்த கம்பியில் தேர் உரசி 13 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கர்னூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக்காயங்கள் 10%க்கும் கீழ் இருப்பதால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இருப்பினும் தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via