பிரேசில் கொட்டித் தீர்த்தது கனமழை பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி.

by Staff / 29-05-2022 01:44:33pm
பிரேசில்  கொட்டித் தீர்த்தது கனமழை பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி.

 தென் அமெரிக்க நாடான பிரேசில் கொட்டி தீர்த்த கனமழை பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். பெர்ணாம்பாகோ  மாகாணத்தில் கடந்த இரு நாட்களில் கொட்டி தீர்த்த கன மழை மற்றும் நிலச்சரிவில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. பேரிடரில் சிக்கி 35 பேர் உயிரிழந்த நிலையில் 700க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறினர் சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் மீட்புப் பணிகளுக்கான ராணுவத்தின் உதவியை மாகாண அரசு நாடியுள்ளது.

 

Tags :

Share via