ஏ.டி.எம்., கட்டணம் உயர்வு
வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம். ஐந்து முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும், கட்டணம் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது.பணப் பரிவர்த்தனை அல்லாத பிற சேவைக்கு ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்த கட்டணம், 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு ஆக., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதர வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மாதத்துக்கு மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Tags :