நேபாளத்தை அச்சுறுத்தி வரும் தொடர் நிலநடுக்கம்-வீதிகளில் தஞ்சமடையும்மக்கள்.
தொடர் நிலநடுக்கம் காரணமாக நேபாளநாட்டுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 4.1 ரிக்டர் அளவில் பூமி அதிர்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தெருக்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து வடக்கு-வடக்கு கிழக்கில் 393 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags : நேபாளத்தை அச்சுறுத்தி வரும் தொடர் நிலநடுக்கம்-வீதிகளில் தஞ்சமடையும்மக்கள்.