ரூ.10 லட்சம் தொகையை முதல்வர்   நிவாரண நிதிக்கு அளித்த என்.சங்கரய்யா 

by Editor / 28-07-2021 04:19:05pm
ரூ.10 லட்சம் தொகையை முதல்வர்   நிவாரண நிதிக்கு அளித்த என்.சங்கரய்யா 



ரூ.10 லட்சம் தொகையை முதல்வர்  நிவாரண நிதிக்கு வழங்குவதாக  என்.சங்கரய்யா கூறினார்.
 என்.சங்கரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள 'தகைசால் தமிழர்' விருதை இந்த ஆண்டுக்கு எனக்கு வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை பரிந்துரைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த விருதுக்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் - 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழக மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன். சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via