12 மீனவர்களையும், படகுகளையும் விரைவில் விடுவிக்க முதல்வர் கடிதம்

by Staff / 28-10-2023 02:05:02pm
12 மீனவர்களையும், படகுகளையும் விரைவில் விடுவிக்க முதல்வர் கடிதம்

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் 23-10-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் 23,10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via