ஆளுநரின் ஆதாரமற்ற பேச்சு ஒரு வகையில் நல்லதுதான் - ஐ.லியோனி

by Staff / 28-10-2023 03:15:53pm
ஆளுநரின் ஆதாரமற்ற பேச்சு ஒரு வகையில் நல்லதுதான் - ஐ.லியோனி

ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆதாரமற்ற பேச்சு ஒரு வகையில் நல்லதுதான் என்று பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார். பாடப்புத்தகங்களில் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் பேசியது ஆதாரமற்றது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகத்தில் சுதந்திர போரட்ட வீரர்களின் வரலாறுகள் இடம்பெற்றுள்ளன.
அவர் உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லும் போது, மக்களிடம் உண்மையை சொல்ல எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அது ஒரு வகையில் நல்லதுதான் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via