கோடநாடு கொலை வழக்கு; இன்று விசாரணை

by Editor / 02-09-2021 09:34:05am
கோடநாடு கொலை வழக்கு; இன்று  விசாரணை

கோடநாடு கொலைவழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சயானிடம் நடத்தப்பட்ட மேல் விசாரணையின் போது, அதிமுக பிரமுகர்கள் பெயர் அடிபட்டதாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக சயான் போலீசாரிடம் தெரிவித்ததாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவினர் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பிரமுகர்களை வழக்கில் சேர்ப்பதற்காக திமுக அரசு சதித்திட்டம் தீட்டுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற போது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. புலன் விசாரணை நடத்தப்படுவதால் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட உதகை நீதிமன்றம் வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன் படி, இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 

 

Tags :

Share via