காதலித்த மகளை கொலை செய்து கிணற்றில் வீசிய தாய்

by Staff / 31-10-2023 11:57:12am
காதலித்த மகளை கொலை செய்து கிணற்றில் வீசிய தாய்

உத்திரப் பிரதேசம், கௌசாம்பி மாவட்டத்தில் காதலித்ததால் தனது 15 வயது மகளை தாய் மற்றும் குடும்பத்தினர் கோடரியால் வெட்டிக் கொலை செய்து உடலை சாக்குப் பையில் அடைத்து, ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் வீசியுள்ளனர்.இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மகளை கொலை செய்துவிட்டு வயலுக்கு சென்ற தனது மகள் காணாமல் போய்விட்டார் என நாடகம் ஆடியுள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை கண்டுபிடித்த போலீசார் நடத்திய விசாரணையில், குடும்பத்தினர் தான் இந்த கொலையை செய்தனர் என தெரியவந்தது. பின்னர், குற்றத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via