விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

by Staff / 31-10-2023 11:59:16am
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

உத்திரப் பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து நடந்தது. பில்ஹவுர்-கத்ரா நெடுஞ்சாலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் நான்கு வயது குழந்தையும் அடங்கும் என போலீசார் தெரிவித்தனர். பரகாந்த் கிராமத்தில் இருந்து நாயகோன் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி துர்கேஷ் குமார் சிங் தெரிவித்தார்.

 

Tags :

Share via