கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை
வாணியம்பாடி அருகே கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகர் (வயது 39) அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் பெங்களூரில் பூஜா என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் பூஜாவின் குடும்பத்தினர் இதை கண்டிக்க இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி இருவரையும் சடலமாக மீட்டனர்.
Tags :