ராகிங் செய்த மாணவர்களுக்கு சிறை

by Staff / 09-11-2023 11:43:00am
ராகிங் செய்த மாணவர்களுக்கு சிறை

கோவை தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை ராகிங் செய்த சக மாணவர்கள் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்கும் மாணவரிடம், சீனியர் மாணவர்கள் 7 பேர் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த சீனியர்கள், ஜூனியர் மாணவருக்கு மொட்டையடித்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ராகிங் செய்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்ட இந்த 7 பேரையும் நவம்பர் 22-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via