நர்சிங் மாணவி தற்கொலை

by Staff / 01-11-2023 02:56:08pm
 நர்சிங் மாணவி தற்கொலை

உசிலம்பட்டி சிந்துபட்டி அருகே உள்ள கள்ளம்பட்டியை சேர்ந்தவர் நீதி முத்தையா. இவருடைய மனைவி ஜெயராணி, இவர்களின் மகள் ரூபிலா (18) உசிலம்பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில் நேற்று குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது ரூபிலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த சிந்துபட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via