கார் விபத்து.. மது பாட்டில்களை தூக்கிச் சென்ற மக்கள்..

by Staff / 01-11-2023 05:25:06pm
கார் விபத்து.. மது பாட்டில்களை தூக்கிச் சென்ற மக்கள்..

பீகாரில் மாநில அரசு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், பல பகுதிகளில் பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிறது. இந்த நிலையில், கயாவில் செவ்வாய்க்கிழமை கார் ஒன்று விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காரில் மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக கடத்திச் செல்லப்படுவதைக் கண்டனர். அங்கிருந்த மக்கள்
காரில் இருந்த மதுபாட்டில்களை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். விபத்தில் சிக்கி காரில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று அவர்கள் கவலைப்படவில்லை. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via