பாஜகவின் ஸ் டார்ட்-அப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக உயர்ந்த ஆனந்தன் அய்யாசாமி. 

by Editor / 03-11-2023 12:24:51am
பாஜகவின் ஸ் டார்ட்-அப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக உயர்ந்த ஆனந்தன் அய்யாசாமி. 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் ஆனந்தன் அய்யாசாமி  பாரதிய ஜனதா கட்சியினுடைய அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவராக செயல்பட்டு வருகின்றார், மேலும் பாரதிய ஜனதா மீது ஏற்பட்ட பற்றின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளை தென்காசி மாவட்டத்தில் இவர் நிகழ்த்தி வருகிறார். மேலும் கடந்த செப்டம்பர் மாதம் தென்காசி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையின் தென்காசி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அண்ணாமலையோடு இணைந்து ஓய்வு இன்றி சுறுசுறுப்பாக இந்த சுற்று பயணத்தில் பணியாற்றியவர் ஆனந்தன்அய்யாசாமி மேலும் தொடர்ந்து தென்காசி மாவட்ட மாணவ,மாணவியர்களுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு கட்ட முன்னேற்றகரமான தகவல் தொழில்நுட்பங்களை அவர்கள் கற்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்கின்ற நோக்கில் பல்வேறு கல்லூரிகளிலும் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார், மேலும் சமீபத்தில் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.எம்.ரவி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் இவர்,உலக அரங்கில் புகழ் பெற்ற சோகோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் நம்பிக்கைக்குரியவராக வளம் வரும் ஆனந்தன் அய்யாச்சாமி. ஸ்டார்ட் அப் தென்காசி என்கின்ற ஒரு நிகழ்வையும் நடத்தி அதன் மூலம் தொடர்ந்து பல்வேறு முன்னேற்றகரமான நிகழ்வுகளையும் தன்னம்பிக்கையூட்டும் விதமாக மாணவ மாணவியர்களுக்கு வளர்ச்சி பாதைகளை காட்டி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தின் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உடைய திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஒரு முக்கிய தகவல்  தொடர்பு பாலமாக ஸ்டார்ட் அப்பிரிவினை   தமிழக பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்துள்ளது. அதனுடைய தமிழக ஒருங்கிணைப்பாளராக ஆனந்தன்அய்யாசாமியை அய்யாசாமி நியமித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : பாஜகவின் ஸ் டார்ட்-அப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக உயர்ந்த ஆனந்தன் அய்யாசாமி. 

Share via