துப்பாக்கி சூடு - நடவடிக்கை எடுக்கப்பட்டது

by Staff / 04-11-2023 11:49:01am
துப்பாக்கி சூடு - நடவடிக்கை எடுக்கப்பட்டது

தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நேற்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர், “அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது” என கூறியுள்ளார்.

 

Tags :

Share via