உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன் விசாரணைக்குப் பயந்து தூக்கிட்டு தற்கொலை

by Staff / 04-11-2023 11:54:34am
உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன் விசாரணைக்குப் பயந்து தூக்கிட்டு தற்கொலை

உப்புமாவில் விஷம் வைத்து தனது மனைவியை கொலை செய்த கணவர், அதுகுறித்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்குப் பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம். முளகுமூடு பகுதியை அடுத்த வெள்ளிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின் (34). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து தன் மனைவியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவர், தற்போது ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்திருந்ததால், வழக்குக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார்.

 

Tags :

Share via