பெண்களை குறிவைத்து இன்ஸ்டா மன்னன் லீலை
நெல்லையைச் சேர்ந்த சுந்தரம் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் திருமணமான மற்றும் திருமணமாகாத இளம் பெண்களை குறிவைத்து மயக்கி வாழ்க்கையை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பணக்காரனாக காட்டிக் கொள்ளும் சுந்தரம், இன்ஸ்டாவில் அறிமுகமான திருமணமான பெண்ணிடம் இனிக்க இனிக்க பேசி, தனது ஆசை வலையில் வீழ்த்தியுள்ளார். பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சுந்தரத்தை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். சுந்தரத்திடம் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் இளம் பெண்களை குறிவைத்து மயக்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Tags :