எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது

by Staff / 04-11-2023 12:59:26pm
எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது

காஞ்சிபுரம் எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர். சமீபத்தில் உரிமைத் தொகை ரூ.1,000 கேட்ட பொதுமக்களிடம் எம்எல்ஏ எழிலரசன், 15 லட்சம் கொடுப்பதாக பிரதமர் மோடி கூறினாரே கிடைத்ததா என கேட்டார். இதற்கு, பிரதமரை எம்எல்ஏ எழிலரசன் மரியாதையின்றி பேசியதாக கூறி பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இன்று போராட்டம் நடத்த முயன்ற நிலையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via