கேரள ஆளுநரை தொடர்ந்து தமிழக ஆளுநரும் புறக்கணிப்பு

by Staff / 12-02-2024 01:31:42pm
கேரள ஆளுநரை தொடர்ந்து தமிழக ஆளுநரும் புறக்கணிப்பு

நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்காமல் ஒரு சில நிமிடங்களில் முடித்தார். சட்டப்பேரவை கூட்டத் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்து வெளியேறினார். இதற்கு முன்னதாக கடந்த 25ம் தேதி கேரளா சட்டப்பேரவை ஆளுநர் முகமது ஆரிஃப் கான், அரசின் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via