கனவனை அடித்து கொன்ற மனைவி பரபரப்பு வாக்குமூலம்

by Staff / 04-11-2023 03:51:47pm
கனவனை அடித்து கொன்ற மனைவி பரபரப்பு வாக்குமூலம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொசவன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (42) இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு மணிமுடி (35) என்ற மனைவியும் 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சக்திக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்தி வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து உள்ளார். அப்போது அவர் மனைவியை தாக்கி உள்ளார் இதை தடுக்க வந்த மகளையும் சக்தி தாக்க முயன்றுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த மணிமுடி வீட்டிலிருந்து கடப்பாரையை எடுத்து கணவர் தலையில் பலமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்தியின் மனைவியை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் எனது கணவர் குடித்துவிட்டு வந்து தினமும் வீட்டில் தகராறு செய்து வந்தார் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் என்னையும் எனது மகளையும் தாக்கி வீட்டில் கேனில் வைத்திருந்த மன்ணென்ணை எங்கள் மீது ஊற்றி தீ வைத்து எரிக்க முயற்சி செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கடப்பாரை எடுத்து கணவரின் தலையில் தாக்கினேன் இதில் அவர் இறந்து விட்டார் இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via