செம்மரக்கட்டை கடத்திய 5 தமிழர்கள் கைது

by Staff / 07-11-2023 11:23:04am
செம்மரக்கட்டை கடத்திய 5 தமிழர்கள் கைது

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பணியில் ஆந்திர போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில் ரூ.4.31 கோடி மதிப்புள்ள 5338 கிலோ எடையுள்ள 275 செம்மரக்கட்டைகள் மற்றும் பவுடரை கார்களில் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 கார்கள், 6 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை கடத்தி மேற்கு வங்கத்திற்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
 

 

Tags :

Share via