லாரி உரிமையாளர் தற்கொலை

by Staff / 29-04-2023 01:57:39pm
லாரி உரிமையாளர் தற்கொலை

சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி பெரிய காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவஞான பூபதி (வயது 50). இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். இவர், தனது லாரிக்கு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்துள்ளார்.கடந்த 2 மாதங்களாக தவணை தொகை சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள், சிவஞான பூபதியிடம் தவணை தொகை கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த சிவஞானபூபதி, விஷ இலையை தின்று மயங்கி விழுந்தார்.அவரை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவஞானபூபதி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சங்ககிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

 

Tags :

Share via