ரூ. 7 லட்சம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி-இருவர் கைது

by Staff / 09-11-2023 03:47:36pm
ரூ. 7 லட்சம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி-இருவர் கைது

திருவொற்றியூரை சேர்ந்தவர் ஸ்டெல்லா, (வயது 37) தனியார் நிறுவன ஊழியர். இவர், கொடுங்கையூர் டீச்சர் காலனியில், 'தேஷ் சஞ்சய் ராகுல்' என்ற பெயரில் இயங்கி வரும், ஏலச்சீட்டு நிறுவனத்தில் சீட்டு போட்டுள்ளார். கடந்த 2019 நவ. , 25ம் தேதி முதல், மூன்று ஏலச்சீட்டுகள், 15 மாதங்கள் என, 7. 05 லட்சம் ரூபாய்க்கு பணம் செலுத்தியுள்ளார். பணத்தை கேட்ட போது திருப்பி தர மறுத்துள்ளனர். இது குறித்து, கொடுங்கையூர் போலீசில் புகாரளித்தார். மேலும், சென்னை பெருநகர 10வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததில், நீதிமன்ற நடுவர் வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பின், கொடுங்கையூரை சேர்ந்த சிவசங்கர் மணி (வயது 45), கலைச்செல்வி (வயது 40), ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

 

Tags :

Share via